ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையில் உருவாகியுள்ள மகாநதி படம் இன்று வெளியாகிறது. சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த படத்தில் சமந்தா, துல்கர்சல்மான், விஜய தேவரகொண்டா உள்பட பலர் நடித்துள்ளனர். நாக் அஸ்வின் இயக்கியிருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் சிறப்புகாட்சி சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி உள்ளிட்ட குடும்பத்தாருக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த விஜய சாமுண்டீஸ்வரி, கண்கலங்கி போனார். தன் அம்மாவை மீண்டும் திரையில் பார்த்த திருப்தி அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக கீர்த்தி சுரேஷ்க்கு தனது பாராட்டுகளை எஸ்எம்எஸ் வாயிலாக தெரிவித்திருக்கிறார்.
சாவித்ரியின் வாழ்க்கை படத்தில் நடிக்க தொடங்கியபோது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார் கீர்த்தி. தற்போது சாவித்ரியின் மகளே தன்னை பாராட்டியதை எண்ணி மகிழ்ச்சியில் உள்ளார் கீர்த்தி சுரேஷ்.