'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீபத்தில் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ள இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் காமவெறி பிடித்த பேயாக நடித்திருந்தவர் சந்திரிகா ரவி. அந்தப் படத்திற்கு பிறகு கவர்ச்சி வேடங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
ஆஸ்திரிலியாவில் பிறந்து வளர்ந்தவர் சந்திரிகா ரவி. மிஸ் வேர்ல்ட் ஆஸ்திரிலேயாவில் டைட்டில் வென்றவர் மாடலிங் துறையில் நுழைந்தார். நியூயார்க் பிலிம் அகாடமியில் நடிப்பு நடனத்தை முறைப்படி கற்றவர். மேற்கத்திய நடனத்துடன் பரநாட்டியமும் கற்றிருக்கிறார்.
செய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். அதன் பிறகு நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து அவருக்கு கவர்ச்சி அடையாளத்தை கொடுத்துள்ளது.
தற்போது தமிழ், மலையாளத்தில் தயாராகி வரும் உன் காதல் இருந்தால் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கஸ்தூரி, மக்பூல் சல்மான், லீனா, ஆர்த்தி நாக்பால் உள்பட பலர் நடிக்கிறார்கள். கிளாமரை மையமாக கொண்டு பல படங்கள் தயாராவதால் அதில் நடிக்க சந்திரிகா ரவிக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. கவர்ச்சியும் இருக்க வேண்டும், கதையும் இருக்க வேண்டும் என்று கவனமாக படங்களை தேர்வு செய்து வருகிறார் சந்திரிகா ரவி.