பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், வைபவி சாண்டில்யா, சந்திரிகா ரவி நடித்துள்ள படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. சமீபத்தில் வெளிவந்த இந்தப் படம் கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இந்த நிலையில் படத்தில் தங்களை பற்றி தவறாக சித்தரிப்பதாக கூறி திருநங்கைகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
சென்னை தோஸ்த் என்ற அமைப்பைச் சேர்ந்த திருநங்கைகள் சாரா, எழுத்தளார் அப்சரா, ஆகியோர் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். பின்னர் அவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இருட்டு அறையில் முரட்டுகுத்து என்ற படத்தின் பெயரே ஆபாசமாக உள்ளது. அந்தப் படத்தில் திருநங்கைகளை ஆபாசமாக சித்தரித்தும், இழிவுபடுத்தியும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த காட்சிகளை அகற்ற வேண்டும். படத்தை தடை செய்ய வேண்டும். படத்தில் நடித்தவர்கள், இயக்கியவர், தயாரித்தவர் ஆகியோர் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போலீசில் புகார் கொடுத்துள்ளோம்.
எங்கள் புகார் மனுவை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைப்பதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் புகார் அளித்துள்ளோம். தணிக்கை குழுவில் திருநங்கைகளை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் அப்போது தான் இதுபோன்ற காட்சிகள் வராமல் தடுக்க முடியும். என்றனர்.