ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் நடிகர் சங்கத்துக்கென்று 1986-ம் ஆண்டு 26 செண்ட் நிலம் வாங்கப்பட்டது. இந்த நிலத்தை நடிகர் சங்கத்தின் செயற்குழு, பொதுக்குழு ஒப்புதல் இன்றி 1996ம் ஆண்டு ராதாரவி இரண்டு பேருக்கு விற்பனை செய்துள்ளார். இதில் பெரும் முறைகேடு நடந்துள்ளது என்று புதிதாக பொறுப்பேற்ற நாசர் தலைமையிலான நிர்வாகத்தினர் குற்றம் சாட்டினர்.
இது தொடர்பாக நடிகர் சங்க நிர்வாகிகள், காஞ்சிபுரம் போலீஸ் ஐஜி மற்றும் எஸ்பியிடம் புகார் அளித்தனர். இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் புகாருக்கு முகாந்திரம் இருந்தால் போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் போலீசார் நடிகர் சங்கதிடம் புகாருக்கான ஆதாரங்களை கேட்டது.
இதனால் நடிகர் சங்கத் தலைவர் நாசர், நேற்று காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசாரை சந்தித்து ராதாரவியின் மோசடிக்கு எதிரான ஆவணங்களை சமர்ப்பித்தார். போலீசர் நாசரிடம் 2 மணி நேரம் விசாரித்தனர். போலீசாரின் கேள்விகளுக்கு நாசர் ஆதாரத்துடன் பதில் அளித்துள்ளார். விரைவில் ராதாரவி மீது மோசடி வழக்கு தொடரப்படலாம் என்று தெரிகிறது.