மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
நடிகர் பிரகாஷ்ராஜ் தனது தோழியும், பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் கொலைக்கு பிறகு மத்திய அரசை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
"பிரதமர் மோடி என்னை விட சிறந்த நடிகர்" என்றார். இதனால் கர்நாடக மாநில பா.ஜ.கவினர் பிரகாஷ்ராஜூக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், மைசூருவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரகாஷ் ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது...
நான் பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்பினருக்கு எதிராக பேசி வருவதால், என்னை கொலை செய்ய சதி நடக்கிறது. சில இந்து அமைப்புகள் என்னை கொலை செய்ய திட்டம் தீட்டி வருகிறார்கள். எந்த நேரத்திலும் நான் கொலை செய்யப்படலாம். அதற்கு நான் அஞ்சவில்லை. என்னிடம் இருந்து உயிரை வேண்டுமானால் பறித்துக் கொள்ளலாம். ஆனால் என்னுடைய அறிவு, நடிப்பு திறமையை யாராலும் பறிக்க முடியாது.
பிரதமர் மோடிக்கு நாட்டை ஆளத் தெரியவில்லை. நல்லாட்சி நடத்துவதாக கூறிய குழப்பங்களை உண்டாக்கி உள்ளார். இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். கர்நாடக சட்டசபை தேர்தலில் மக்கள், மதவாத கட்சிகளுக்கும், வன்முறையை தூண்டும் கட்சிகளுக்கும் ஓட்டளிக்காமல், மக்களாட்சி நடத்தும் நல்ல கட்சிகளை ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.