ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள நடிகர் சங்கமான 'AMMA' சார்பில் அம்ம மழவில்' என்ற பெயரில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நட்சத்திர கலை விழாவில் மோகன்லால், மம்முட்டி, ஜெயராம், துல்கர் சல்மான் உட்பட மலையாள திரையுலகினர் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் மோகன்லாலின் அழைப்பின் பேரில் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
அப்போது சூர்யா பேசும்போது, ''நீட் தேர்வு எழுத தமிழகத்திலிருந்து கேரளா வந்த மாணவ, மாணவிகளுக்கு கேரள அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தமைக்காக கேரள முதல்வர் பினராய் விஜயன் மற்றும் கேரள அரசுக்கு நன்றிகள் தெரிவித்தார்.
இந்த விழா மூத்த கலைஞர்களுக்கு பென்ஷன் உட்பட பல நிதி உதவிகளை செய்வதற்காக நிதி திரட்டும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட நிகழ்ச்சி. எனவே, மலையாள நடிகர் சங்கத்திற்கு 10 லட்சம் ரூபாய் நன்கொடையும் அளித்தார் சூர்யா. நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், இன்னசன்ட் ஆகியோர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்தார்களாம்!