'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மார்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழ்த் திரையுலகத்தில் ஏற்பட்ட வேலை நிறுத்தத்தால் பல படங்கள் வெளியாகாமல் தேங்கிப் போயுள்ளன. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அவற்றை ஒழுங்குபடுத்தி வாரம் நான்கு படங்களுக்கு மிகாமல் வெளியிட்டு வருகிறது.
ஸ்டிரைக் முடிந்த பின் வெளிவந்த 'மெர்க்குரி, முந்தல், தியா, பாடம், பக்கா, அலைபேசி, காத்திருப்போர் பட்டியல்' ஆகிய படங்களின் வசூல் திருப்திகரமாக அமையவில்லை. ஆனால், ஆபாசத்தின் உச்சமாக வெளிவந்த அடல்ட் ஒன்லி படமான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படம் மட்டுமே வசூலைக் குவித்து வருகிறது. அதே சமயம் தமிழ் சினிமாவின் தரத்தை பாதாளத்திற்கு தள்ளியிருக்கும் இந்த ஆபாசப் படம் பற்றி கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
வரும் மே 11ம் தேதி அரவிந்த்சாமி, அமலா பால் நடித்துள்ள 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', அருள்நிதி, மகிமா நம்பியார் நடித்துள்ள 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', விஷால், சமந்தா நடித்துள்ள 'இரும்புத் திரை' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. தமிழிலும் எடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் 'நடிகையர் திலகம்' படமும் அதே தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரையுலக ஸ்டிரைக் முடிந்த பின் ஓரளவிற்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட படங்கள் இந்த வாரம்தான் வெளியாகின்றன. அதனால், இந்தப் படங்களுக்கிடையில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, விஷால் நடித்துள்ள 'இரும்புத் திரை' படத்திற்கு வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு திருச்சி, மதுரை ஏரியாக்களில் முந்தைய 'துப்பறிவாளன்' நஷ்டத்திற்காக ரெட்டி போட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.