தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த விளக்குடி மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்திற்கு கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுத மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு அவர், தனது தந்தை கிருஷ்ணசாமியுடன் சென்றார். இதய நோயாளியான அவர் அங்கேயே மரணம் அடைந்தார். நீட் தேர்வால் தந்தையை இழந்த மாணவனுக்கு நடிகர் கமலும், விஷாலும் உதவ முன் வந்துள்ளனர்.
இதுகுறித்து விஷால் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கடும் மன உளைச்சலுக்கும், அலைக்கழிப்புக்கும் இடையிலும் கூட தங்கள் மருத்துவ கனவுக்காக என் தம்பி, தங்கைகள், இந்தத் தேர்வை எழுதியிருக்கிறார்கள். நீட் தேர்வுக்காக கேரளா சென்று அங்கேயே தந்தை கிருஷ்ணசாமியை பறிகொடுத்த மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்கிறேன். இந்த இழப்பு ஈடுசெய்ய முடியாதது.
அவரை ஒரு மருத்துவனாக்கி பார்க்க நினைத்த கிருஷ்ணசாமியின் கனவை நிறைவேற்றுவது நம் கடமை. கஸ்தூரி மகாலிங்கத்திற்கு அதற்கான உதவிகளை செய்யத் தயார். அனிதா முதல் கிருஷ்ணசாமி வரையிலான நீட் பலிகளுக்கு மக்கள் எதிர்காலத்தில் நிச்சயம் பதில் கொடுப்பார்கள். இவ்வாறு விஷால் கூறியிருக்கிறார்.
கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஓகி புயல் முதல் நீட் தேர்வு வரை தமிழர்கள் அல்லல்படும் போதெல்லாம் உதவிக்கரம் நீட்டிய அண்டை மாநில முதல்வர் பினராய் விஜயனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவன் தந்தை உடல் திருத்துறை பூண்டி வந்த அடையுமம் வரை மக்கள் நிதி மையம் அதற்கான உதவிகளை செய்யும். என்று தெரிவித்துள்ளார்.