அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சூப்பர் ஸ்டார் ரஜினி விரைவில் கட்சி தொடங்க இருக்கிறார். அதற்காக தற்போது மாவட்டம் மற்றும் கிளை வாரியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இந்த பணி கிட்டத்தட்ட முடிவடைந்திருக்கிறது. அமைக்கப்பட்ட குழுவினர் பற்றி பல தரப்பிலிருந்தும் புகார்கள் வருகிறது. இதனால் தவறான நபர்கள், தவறு செய்கிறவர்களை பற்றி விசாரித்து களையெடுக்க ஒழுங்கு நடவடிக்கை குழுவை அமைத்துள்ளார்.
இந்த குழுவில் டாக்டர் இளவரசன், ராமதாஸ், என்.கோவிந்தராஜ், கே.கே.துரைராஜ், பரமேஸ்வரன் பகவான், வி.எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். புகார்கள் மற்றும் கருத்துக்களை இந்த குழுவினரிடம் மன்றத்தினர் தெரிவிக்கலால் இந்த குழு மாதம் ஒரு முறை கூடி விசாரித்து நடவடிக்கை எடுக்கும். இந்த தகவல் ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.