ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபகாலமாக சினிமா உலகில் படவாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைத்து வரும் கலாச்சாரம் குறித்து சில நடிகைகள் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அதையடுத்து நடிகைகளை பாது காக்க திரையுலகினர் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கியுள்ளனர்.
இந்த நிலையில், இதுகுறித்து நடிகை சமந்தா கூறுகையில், திரையுலகில் மட்டுமின்றி எல்லா துறைகளிலுமே இதுபோன்ற பாலியல் தொல்லைகள் இருக்கிறது. அதேசமயம் சினிமாவை எடுத்துக்கொண்டால் இங்கே நல்லவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனபோதும் ஓரிரு கறுப்பு ஆடுகளும் இருக்கத்தான் செய்கிறது. அவர்களால்தான் இதுபோன்று பாலியல் டார்ச்சர் நடந்து வருகிறது. இந்த மாதிரி நபர்களை களையெடுத்து விட்டால் சினிமா அற்புதமான உலகமாகி விடும் என்று கூறுகிறார் சமந்தா.