அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தமிழில் கடந்த ஆண்டு வெளிவந்த 'சி 3' படத்திற்குப் பிறகு வேறு எந்தப் படத்திலும் நடிக்கும் வாய்ப்பு ஸ்ருதிஹாசனுக்குக் கிடைக்கவில்லை. தமிழில் அவரது அப்பா இயக்கத்தில் ஆரம்பமான 'சபாஷ் நாயுடு' படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. தற்போது ஹிந்தியில் மகேஷ் மஞ்ரேக்கர் இயக்கத்தில் வித்யுத் ஜம்வால் ஜோடியாக ஒரே ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. தன் மகள் ஸ்ருதிஹாசனின் நடிப்பைக் காண படப்பிடிப்பு தளத்திற்கே சரிகா சென்றுள்ளார். அம்மா தன் படப்பிடிப்பைக் காண வந்தது குறித்து ஸ்ருதிஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஸ்ருதிஹாசன் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்று வதந்திகள் பரவிய நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த ஹிந்திப் படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார். தமிழிலும், தெலுங்கிலும் அடுத்து அவர் நடிக்கும் போதுதான் அந்த வதந்தி முற்றிலுமாக மறையும். அதுவரை தொடர்ந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.