இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
அரசியலில் களம் இறங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மையம் என்ற கட்சியை துவக்கி உள்ளார். சமீபத்தில் மையம் விசில் என்ற செயலியை அறிமுகம் செய்தார். அந்த விசிலை டவுன் லோடு செய்து வைத்துக்கொண்டு, சமூகத்தில் நடக்கும் தவறுகள், மக்கள் விரோத செயல்கள் அனைத்தையும் பதிவு செய்யலாம் என்று கேட்டுக்கொண்டார் கமல்.
நீங்கள் அனுப்பும் தகவல் உடனடியாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு ஆவன செய்ய வலியுறுத்தப்படும் என்று கூறியிருந்தார் கமல்.
அதையடுத்து ஏராளமானோர் விசில் செயலிலை டவுன்லோடு செய்து வந்த நிலையில், விசில் செயலியில் ஒரு புகார் வந்துள்ளது. அதாவது சென்னை அனகாபுத்தூரில் உள்ள தோல் தொழிற்சாலையில் வெளியிடப்படும் கழிவுகள் அங்கிருந்து ஆற்றில் கலந்து நீர் மாசு ஏற்படுகிறது என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதையடுத்து கமல்ஹாசன் டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், மக்கள் நீதி மையம் பெருமளவு வேலைவாய்ப்பு கொடுத்து வரும் தொழிற்சாலைகளுக்கு எதிரானது அல்ல. ஆனால் வணிகம் மற்றும் வேலைவாய்ப்பின் பெயரில் நிகழும் கொடுமையான மாசுகளுக்கு எதிரானது. அரசு இதுபோன்ற கொடுமையான மாசுக்களை தடுப்பதற்கான தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும். அனகாபுத்தூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை தேவை. தொழில்கள் மெல்லச் சாகக்கூடாது... மக்களும் தான் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.