ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள சினிமாவில் உணர்வுப்பூர்வமான படங்களை தருவதில் பெயரெடுத்தவர் இயக்குனர் ரஞ்சித் சங்கர். அதுமட்டுமல்ல, மிகவும் வேகமாக படங்களை இயக்கி வெளியிடுபவரும் கூட.. ஒரு இயக்குனர் வருடத்திற்கு ஒரு படத்தை இயக்கி ரிலீஸ் பண்ணுவதற்கே பெரும்பாடு படும் நிலையில் கடந்த நான்கு வருடங்களில் ஒரே நடிகரை வைத்து ஐந்து படங்கள் இயக்கியுள்ளார் என்றால் அது இயக்குனர் ரஞ்சித் சங்கர் மற்றும் நடிகர் ஜெயசூர்யா ஆகிய இருவரின் கூட்டணி தான்..
தற்போது ஜெயசூர்யாவின் அடுத்த படமான 'ஞான் மேரிக்குட்டி' என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்டார்.. வரும் ஜூன்-15ல் ரம்ஜான் ரிலீஸாக இதை வெளியிட தேதியும் அறிவித்துவிட்டார். அந்தவகையில் பார்த்தால் வெறும் 13 மாதங்களில் ராமண்டே ஈடன் தோட்டம், புண்யாலன் பிரைவேட் லிமிடெட், ஞான் மேரிக்குட்டி என மூன்று படங்களை ரிலீஸ் செய்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆகிறார் ரஞ்சித் சங்கர்.