ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வெற்றிமாறன் உதவியாளர் ரவிஅரசு. அதர்வா நடிப்பில் ஈட்டி படத்தை இயக்கிய அவர் தற்போது ஐங்கரன் என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் ஜி.வி.பிரகாஷ், மகிமா நம்பியார், சித்தார்த்த சங்கர், ரவி வெங்கட்ராமன் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார், சரவணன் அபிமன்யூ ஒளிப்பதிவு செய்துள்ளார், காமன் மேன் பிக்சர்ஸ் சார்பில் பி.கணேஷ் தயாரித்து உள்ளார். படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. படம் பற்றி ரவிஅரசு கூறியதாவது:
ஒருவனுக்கு 5 கைகள் இருந்தால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை ஹீரோ செய்வார். அதனால் அவர் ஐங்கரன். எல்லோர் வீட்டிலேயும் ஒரு இளம் விஞ்ஞானி இருப்பார். அவரை யாரும் கண்டு கொள்ள மாட்டோம். அவன் எதையாவது செய்து கொண்டே இருப்பான் அவனை உற்சாகப்படுத்த மாட்டோம் அப்படி ஒரு இளம் விஞ்ஞானியோட கதை. உதாசீனப்படுத்தப்படுகிற அவன் கொண்டாடப்படுகிறவனாக எப்படி மாறுகிறான் என்பதை ஆக்ஷ்ன் ஜானர்ல சொல்கிறோம்.
இந்த கதை தனுசை மனதில் வைத்து எழுதப்பட்டது. அவரிடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை. கொஞ்சம் மாற்றி விஜய் சேதுபதியிடம் சொன்னேன். "நல்லா டெவலப் பண்ணுங்க பண்ணலாம்" என்றார். ஆனால் அவரால் கால்ஷீட் ஒதுக்கத்திர முடியாத அளவிற்கு வேறு படங்களில் கமிட் ஆகியிருந்தார். அதனால் ஜி.வி.பிரகாஷ்கிட்ட கதை சொல்லப் போனேன்.
"நீங்க கதையெல்லாம் சொல்ல வேணாம். எப்போ ஷூட்டிங் வரணும்னு சொல்லுங்க வர்றேன்"னு சொன்னார். சொன்னபடியே டெடிகேட்டிவா நடிச்சுக் கொடுத்தார். தனுசும், விஜய் சேதுபதியும் நடிச்சிருந்தா எவ்வளவு திருப்தி கிடைத்திருக்குமோ அதே திருப்தியை ஜி.வி.பிரகாசும் கொடுத்திருக்கிறார் என்றார்.