டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
2017-ம் ஆண்டிற்கான 65வது தேசிய விருது வழங்கும் விழா நேற்று சர்ச்சையுடன் நடந்து முடிந்தது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி முதல் முறையாக தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார். நேற்றைய விழாவில் அவருடைய கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர். விருதை மூவருமே குடியரசுத் தலைவர் கையால் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் அவருடைய அம்மாவின் நினைவாக அம்மாவின் சேலையை அணிந்து கலந்து கொண்டார். அந்த சேலையை நடிகர் ராம்சரணின் திருமணத்தன்று நடிகை ஸ்ரீதேவி அணிந்து வந்திருக்கிறார்.
ஜான்வி அணிந்தது அவருடைய அம்மா சேலை என்ற தகவலை ஸ்ரீதேவியின் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றிய மனிஷ் மல்கோத்ரா தெரிவித்துள்ளார். அந்த சேலை ஸ்ரீதேவியின் தனிப்பட்ட கலெக்ஷனில் இருந்தது என்றும் கூறியிருக்கிறார்.