தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
2017ம் ஆண்டிற்கான தேசிய விருது பெற்றவர்கள் நேற்று நிகழ்ச்சி முடிந்ததும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அது பற்றி டுவிட்டரில் “தேசிய விருதுகளை வென்ற சிலர் நேற்று இரவு குடியரசுத் தலைவருடன்” என ஒரு புகைப்படத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டுள்ளார்.
அதற்கு ஆஸ்கர் விருது வென்ற ஒலிப்பதிவுக் கலைஞரான ரசூல் பூக்குட்டி, “நீங்கள் சில பேர் மட்டுமா, வருத்தம்,” என அதற்குக் கண்டனத் தெரிவித்துள்ளார். அதோடு அந்தப் புகைப்படத்தில் மூத்த கலைஞரான பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் நின்று கொண்டிருக்கிறார். ஒரு மூத்த கலைஞரை இப்படியா புகைப்படத்தில் நிற்க வைப்பது என ரசிகர்கள் பலரும் அதற்குக் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
நேற்றைய விருது வழங்கும் விழாவில் 69 கலைஞர்கள் விருதை வாங்காமல் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரகுமானுக்கு ரசூல் பூக்குட்டி கண்டனத் தெரிவித்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.