ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்தப் படத்தில் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் போக்கில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. வேலைக்காரன் படத்தை முடித்த பிறகு பொன்ராம் இயக்கத்தில் 'சீமராஜா' படத்தில் நடித்து வந்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் முன்பே ஆர்.ரவிகுமார் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
இரண்டு படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் எம்.ராஜேஷ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. அவர் சொன்ன கதையை சிவகார்த்திகேயன் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டதால், கடைசி நேரத்தில் எம்.ராஜேஷை இயக்குநராக சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து சிபாரிசு செய்தார்களாம்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் 13-ஆவது படமான இப்படத்திற்கான கதாநாயகி மற்ற நடிகர் நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.
'பொன்ராம்' இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் பொன்ராமுடன் இணைந்து வசனங்கள் எழுதினார் எம்.ராஜேஷ். அந்த அடிப்படையிலேயே சிவகார்த்திகேயனின் 13-ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது.
பொன்ராம் இயக்கும் 'சீமராஜா'வின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜேஷ் இயக்கும் படமும் அதனை தொடர்ந்து ஆர்.ரவிகுமார் இயக்கும் படமும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.