மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் அனுஷ்கா 'பாகுபலி' படங்களுக்குப் பிறகு இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் புகழ் பெற்ற நடிகையாக மாறிவிட்டார். 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு அனுஷ்கா நடித்து வெளிவந்த 'பாகமதி' படமும் தெலுங்கில் நல்ல வசூலைக் கொடுத்து வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு அனுஷ்கா புதிய படங்கள் எவற்றிலும் இதுவரை ஒப்பந்தம் ஆகவில்லை. அவரைத் தேடி பல வாய்ப்புகள் வந்தாலும் இன்னும் எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கிறார் என்கிறார்கள்.
ஒரு பக்கம் அவரது குடும்பத்தார் அவருக்குத் திருமணம் செய்து வைக்க ஆசைப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின. 13 வருடங்களாக தமிழ், தெலுங்கில் பல முக்கியமான படங்களில் நடித்துள்ளவர் அனுஷ்கா. தற்போது ஆன்மீக சுற்றுப் பயணம் சென்றுள்ளார். கேதார்நாத் கோவிலுக்கு அவர் சென்ற புகைப்படங்கள், வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இந்த சுற்றுப் பயணம் குறித்து அனுஷ்கா அவருடைய பேஸ்புக்கில் எதையும் பகிரவில்லை. ருத்திராட்ச மாலை அணிந்து, நெற்றி நிறைய திருநீறு, குங்குமம் ஆகியவற்றுடன் அடையாளம் தெரியாத அளவிற்கு பக்தையாக மாறியிருக்கிறார் அனுஷ்கா.
காதலருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செல்லும் நடிகைகளுக்கு மத்தியில் ஆன்மீக சுற்றுப் பயணம் செல்லும் அனுஷ்கா உண்மையிலேயே வித்தியாசமானவர்தான்.