இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இந்த ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் 60 க்கும் மேற்பட்டோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா இன்று (மே 3) டில்லியில் நடைபெற உள்ளது. பொதுவாக தேசிய விருதுகளை ஜனாதிபதி தான் வழங்குவார்.
இந்நிலையில் இன்று நடைபெறும் விழாவில் குறிப்பிட்ட 11 பேருக்கும் மட்டும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், விருதுகளை வழங்குவார் என்றும், மற்றவர்களுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வழங்குவார் என்றும் தகவல் வெளியானது.
இந்த தகவலால் விருது அறிவிக்கப்பட்டவர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளனர். இது தங்களை அவமதிக்கும் செயலாக உள்ளதால், விருது வழங்கும் விழாவை புறக்கணிக்க போவதாக விருது பெறுபவர்கள் கூறி உள்ளனர். இவ்விழாவை தாங்கள் புறக்கணிக்க முடிவு செய்திருப்பது தொடர்பான தகவலையும் ஸ்மிருதி இரானிக்கு அவர்கள் கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் விழாவை புறக்கணித்தனர். இதனையடுத்து அவர்களுக்காக அமைக்கப்பட்ட இருக்கைகள் அகற்றப்பட்ட பின்னர் , டில்லியில் விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கலந்து கொள்ளவில்லை. அமைச்சர் ஸ்மிருதி மற்றும் ரத்தோர் விருதுகளை வழங்கினர்.
திரைத்துரைக்கு உகந்த மாநில விருது, மத்திய பிரதேசத்திற்கும், இதே பிரிவில் சிறப்பு விருது உத்தரகண்டிற்கும் வழங்கப்பட்டது.
சிறந்த எடிட்டிங்கிற்காக டென்ஜிங் குன்சோக் மற்றும் சஞ்சிவ் மோங்காவிற்கும் விருது பெற்றனர்.
யாஷாராஜ் கார்ஹடே, ராமன் தேவ்கர், பரக்ருதி மிஸ்ரா, பார்வதி மற்றும் பங்கஜ் திரிபாதி ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.
நியூட்டன் படத்திற்கு சிறந்த திடைப்படம் விருது வழங்கப்பட்டது. மறைந்த நடிகர் வினோத் கன்னாவிற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. மாம் படத்தில் நடித்ததற்காக நடிகை ஸ்ரீதேவிக்கு விருது வழங்கப்பட்டது.