விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு கடந்த வருடத்திற்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. மாம் படத்தில் நடித்ததற்காக நடிகை ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது இன்று நடைபெற உள்ள விழாவில் வழங்கப்பட உள்ளது. இந்த விழாவில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மூத்த மகள் ஜான்வி கபூர், இளைய மகள் குஷி கபூர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளார்கள். இன்று நடைபெற உள்ள விழாவிற்கான ஒத்திகை நேற்று நடைபெற்றது. அதில் அவர்கள் மூவரும் கலந்து கொண்டார்கள்.
இன்று நடைபெற உள்ள விருது வழங்கும் விழாவில் ஸ்ரீதேவியின் சிறந்த நடிகைக்கான விருதை ஸ்ரீதேவியின், கணவனர் போனிக்கபூர், மகள்கள் ஜான்வி மற்றும் குஷி ஆகியோர் ஜனாதிபதியிடம் பெற்று கொண்டனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீதேவிக்குக் கிடைத்துள்ள முதல் தேசிய விருது இதுதான். அந்த விருதும் அவருடைய மறைவுக்குப் பிறகே அறிவிக்கப்பட்டது. அந்த பெருமைமிக்க விருதை வாங்கும் பாக்கியமும் ஸ்ரீதேவிக்குக்
கிடைக்கவில்லை.