அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பழம்பெரும் இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவன். இவரிடம் உதவியாளராக இருந்துதான் பின்னர் இசை அமைப்பாளர் ஆனார் எம்.எஸ்.விஸ்வநாதன். அவர் தன் குரு மீது மிகவும், மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். அதனால் அவரது நூற்றாண்டு விழாவை எம்.எஸ்.விஸ்வநாதன் ரசிகர் மன்றம் நடத்துகிறது.
வருகிற 6ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4மணிக்கு சென்னை தி.நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் விழா நடக்கிறது. இந்த விழாவில் இசை பிரபலங்கள் பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம், சங்கர் கணேஷ், புலமை பித்தன், பூவை செங்குட்டுவன், டிரம்ஸ் கலைஞர் சிவமணி, பிறைசூடன், ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். விழாவில் கே.வி.மகாதேவனுக்கு கீதாஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பிரபல பாடகர்கள், பாடகிகள் கலந்து கொண்டு கே.வி.மகாதேவன் இசை அமைத்த பாடல்களை பாடுகிறார்கள்.