வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் |
1991ல் வெளியான தளபதி படத்தில் ரஜினி மற்றும் மம்முட்டியுடன் இணைந்து நடித்திருந்தார் அரவிந்த்சாமி. அந்தப்படத்தை தொடர்ந்து செல்வா டைரக்சனில் 'புதையல்' என்கிற படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்த அரவிந்த்சாமி. தற்போது 21 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தெரிகிறது..
ஆனால் தமிழில் அல்ல.. மலையாளத்தில். ஆம்.. மம்முட்டியை வைத்து சந்தோஷ் சிவன் இயக்கவுள்ள வரலாற்று படமான 'குஞ்சாலி மரைக்கார்' படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்க அரவிந்தசாமியை அணுகியுள்ளார்களாம்.
அரவிந்த்சாமியின் முதல் படமான தளபதி முதல் பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சந்தோஷ் சிவன். அந்த நட்பின் அடிப்படையில் அரவிந்த்சாமி இந்தப்படத்தில் நடிப்பார் என்றும் உறுதியாக எதிர்பார்க்கப்படுகிறது.