பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மன்னர் வகையறா படத்தை அடுத்து, 'கன்னிராசி', 'களவாணி-2' உட்பட அரைடஜன் படங்களில் நடித்து வருகிறார் விமல். இவற்றில் 'கன்னிராசி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. விரைவில் இப்படம் வெளியாகிறது.
'களவாணி-2' படத்தின் படப்பிடிப்பு மே 3-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. இந்த படங்களைத் தொடர்ந்து எழில், சுராஜ் ஆகியோர் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார் விமல். இதில் சுராஜ் இயக்கும் படத்தில் விமலுடன் வடிவேலுவும் இணைந்து நடிக்க இருக்கிறார்.
முழுநீள காமெடி படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில் விமலும், வடிவேலுவும் போலீஸ்காரர்களாக நடிக்க இருக்கிறார்கள். அதாவது சுராஜ் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த மருதமலை படத்தில் வடிவேலு போலீஸ் ஏட்டாக நடித்தார். அர்ஜூன் கான்ஸ்டபிளாக நடித்தார்.
தற்போது விமல் நடிக்க உள்ள படத்தில் இந்த காமெடி டிராக்கையே முழுநீளப்படமாக எடுக்கும் திட்டத்தில் திரைக்கதை அமைத்திருக்கிறாராம் சுராஜ். இதனால் படத்துக்கு மருதமலை-2 என்று பெயர் சூட்டலாமா என்றும் யோசித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவிருக்கிறது.