'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
நடிகர் அஜித்குமார் நேற்று தனது 47வது பிறந்த நாளை கொண்டாடினார். நேற்று முழுக்க அவரது பிறந்த நாள் ஹேஷ்டேக் இணையதளங்களில் வைரலாகிக்கொண்டிருந்தது.
இந்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் செங்கோட்டையன், திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா, பாஜகவின் வானதி சீனிவாசன் உள்பட சில அரசியல் பிரமுகர்களும் தங்களது இணையபக்கத்தில் அஜித்திற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தனது ரசிகர் மன்றத்தில் அரசியல் புகுந்து விட்டது என்ற ஒரே காரணத்திற்காக மன்றத்தையே கலைத்தவர் அஜித். ஆனால் இப்போது அவரை அதிமுக, திமுக, பாஜகவினர் வாழ்த்தியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே அமைச்சர் செங்கோட்டையன், "என் டுவிட்டர் பக்கத்தில் தவறுதலாக யாரோ அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டுள்ளனர். அதை நான் பதிவு செய்யவில்லை என மறுப்பு தெரிவித்தார்.