தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
உயர்திரு 420, துப்பாக்கி, ஆரம்பம், இரும்பு குதிரை, போகன், படங்களில் ஸ்டைலான வில்லியாக நடித்தவர் அக்ஷ்ரா கவுடா. மாயவன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். பெங்களூரைச் சேர்ந்த அக்ஷ்ரா, தமிழில் அதிக வாய்ப்பு இல்லாமல் கன்னடப் படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது மீண்டும் தமிழுக்கு வருகிறார். அதுவும் எம்.ஜி.ஆரின் வில்லியாக. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இரண்டாம் பாகமான கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு, அனிமேஷன் படமாக உருவாகி வருகிறது. இதில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, நாகேஷ் கேரக்டர்கள் அனிமேஷனில் உருவாகிறது. மற்ற கேரக்டர்கள் நேரடியாக நடிக்கிறார்கள்.
இதில் அக்ஷ்ரா கவுடா, கிழக்கு ஆப்பிரிக்கா செல்லும் எம்.ஜி.ஆருக்கு அந்த நாட்டில் வாழும் வில்லியாக நடிக்கிறார். இவர் நடிக்கும் காட்சிகள் அனிமேஷன் காட்சிகளாகவும், நேரடி காட்சிகளாகவும் படத்தில் இடம் பெறுகிறது என தயாரிப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.