வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. திரைத்துறையை சேர்ந்த பெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் என்ற அமைப்பை தொடங்கப்போவதாக அறிவித்திருந்தனர். இதன் துவக்க விழா நேற்று நடந்தது. இயக்குனர் பா.ரஞ்சித் துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
பெண்களுக்காக பெண்களாலே உருவாக்கப்பட்ட சங்கம். ஒதுக்குதல் சாதி, மதம்னு பல்வேறு பிரிவு இருப்பதை போல் பெண்கள் மீதான ஒதுக்குதல் ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவமாக இயல்பா இன்று வரையில் நடந்து கொண்டு இருக்கிறது. பெண்கள் ஏதோ ஒரு உறவு முறையில் மாட்டிக்கொண்டு ஒதுக்கப்படுகிறார்கள். அதையும் தாண்டி சில பெண்கள் ஒதுக்குதலை எதிர்க்கிறார்கள் அவர்களின் வெளிப்பாடாய் தான் இந்த சங்கத்தை நான் பார்க்கிறேன்.
இந்த சங்கம் நிச்சயமா வீரியமா செயல்படனும், ஏன்னா பெண்கள் மீது பாலியல் சுரண்டலை தடுக்க வேண்டும். வீட்டை விட்டு வெளிவரும் பெண்கள் வேலை பார்க்கும் இடத்தில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறார்கள். நமக்கு தேவையானதை நாம் போராடினால் மட்டும் தான் பெற முடியும். பிரச்சனைகளை தீர்க்கும் சங்கமாக இது இருக்கும் என நம்புகிறேன். என்றார்
விழாவில் பி.சி.ஸ்ரீராம், சத்யராஜ், ரேவதி, அதிதி மேனன், ரோகினி, பாலாஜி சக்திவேல், புஷ்கர் காயத்திரி, அம்பிகா, சச்சு, சரோஜாதேவி, ப்ரேம், பிரசன்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வைஷாலி சுப்ரமணியன் (தலைவர்), ஏஞ்சல் சாம்ராஜ் (துணைத்தலைவர்), ஈஸ்வரி (பொது செயலாளர்), மீனா மருதரசி (துணை செயலாளர்), கீதா (பொருளாலர்) ஆகியோர் செய்திருந்தனர்.