ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கேரளாவைச் சேர்ந்த இஷாரா, துபாயில் பிறந்து வளர்ந்தவர். மாடலிங் துறையில் இருந்து வெண்மேகம் படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர். அதன் பிறகு பப்பாளி படத்தில் நடித்தார். சதுரங்க வேட்டை படத்தின் மூலம் கவனம் பெற்றார். ஆனால் அதற்கு பிறகு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஷாகில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்டாலும் தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் இஷாரா. அவர் மேலும் கூறியதாவது:
எனது திருமணம் நானே எதிர்பாராத வகையில் நடந்தது. ஷாகில் ஒரு பஞ்சாபி. ஒரு நிகழ்ச்சியில் அறிமுகமானவர். அவருடைய நேர்மையும், அன்பும் என்னை கவர்ந்தது. அடுத்தடுத்த சந்திப்பு காதலை ஏற்படுத்தியது. பெற்றோர்களும் அதனை ஏற்றனர். திருமணம் முடிந்து விட்டது. கேரள முறைப்படியும், பஞ்சாபி முறைப்படியும் திருமணம் செய்து கொண்டோம்.
சினிமா எனது பேஷன். அதனை அத்தனை எளிதில் விட முடியாது. தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன். தமிழ்நாடு தான் என் முதல் வீடு, இரண்டாவது வீடு துபாய். இப்போது இரண்டாவது வீட்டில் இருக்கிறேன். விரைவில் முதல் வீட்டுக்கு வருவேன். நான் நடித்த அதிமேதாவிகள், பப்பரப்பம் படங்கள் வெளிவர இருக்கிறது. மேலும் நடிக்க கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன். கவர்ச்சிக்கு இடம் தராமல் நல்ல நடிப்புக்கு இடம் தரும் கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பேன். நடிப்புக்கு என் கணவர் முழு சுதந்திரம் அளித்திருக்கிறார். என்கிறார் இஷாரா.