ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழகத்தில் ஜெயலலிதா இறந்த பிறகு அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழத் தொடங்கியிருக்கிறது. கமல் கட்சி தொடங்கிவிட்டதை அடுத்து, ரஜினியும் கட்சி தொடங்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.
கமல் அரசியலுக்கு வரப்போவதாக டுவிட்டரில் தெரிவித்தபோது, அவரது அண்ணனான சாருஹாசன் எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு, ரஜினியிடம் தலைவருக்குரிய தகுதி உள்ளது, கமலிடம் அது இல்லை என்றும் சொன்னார். ஆனபோதும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்கள் நீதி மையம் கட்சியை தொடங்கி மக்களை சந்தித்து வருகிறார் கமல்.
இந்த நேரத்தில் தற்போது தனது பேஸ்புக்கில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் சாருஹாசன். அதில், தமிழகத்தின் அடுத்த முதல்வர் கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவர் தான். இதை ஒப்புக்கொள்ளாதவர்கள் என்று முட்டாள் என்று கூறலாம். இந்த ஆண்டு உங்களை நான் புரிந்து கொள்ளவேன். அடுத்த ஆண்டு நீங்கள் என்னை புரிந்து கொள்வீர் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
சாருஹாசனின் இந்த கருத்து ரஜினி, கமல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.