அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையினை மூடக்கோரி தொடர்ந்து அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்ட சில திரையுலகினரும் அந்த பகுதிக்கே சென்று மக்களுடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த நிலையில், இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி, தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் மக்களுடன் கலந்து கொண்டு ஆதரவை தெரிவித்தார்.
அதையடுத்து அவர் கூறுகையில், இந்த ஸ்டெர்லைட ஆலையினால் பல்வேறு கொடிய நோய்க்கு இந்த பகுதி மக்கள் ஆளாகி வருகின்றனர். அதனால் கடந்த 25 வருடங்களாக இந்த ஆலையை மூடக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.
எதிர்கால சந்ததியின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆலையை மூட அரசு உத்தரவிட வேண்டும். அதுவரை இந்த மக்களின் போராட்டம் தொடரும். தேவை ஏற்பட்டால் ஜல்லிக்கட்டு போன்று மாணவர்களும் இந்த போராட்ட களத்தில் களமிறங்குவார்கள் என்று கூறியுள்ளார்.