வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
படத்துக்கு படம் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துவருபவர் மலையாள நடிகர் ஜெயசூர்யா. தற்போது 'ஞான் மேரிக்குட்டி' என்கிற படத்தில் ஆணாக இருந்து பெண்ணாக மாறும் கேரக்டரில் நடித்திருக்கிறார். ஜெயசூர்யாவை வைத்து தொடர்ந்து படங்களை இயக்கிவரும் இயக்குனரான ரஞ்சித் சங்கர் இயக்குகிறார்.
இந்தப்படத்தில் பெரும்பாலான காட்சிகளில் சேலைகட்டித்தான் நடித்துள்ளாராம் ஜெயசூர்யா. கடந்த சில வருடங்களாக ஜெயசூர்யாவின் ஆடை வடிவமைப்பாளராக செயல்பட்டு வரும் அவரது மனைவி சரிதா தான் படம் முழுக்க சேலை கட்டிவிட்டுள்ளாராம்.
இதற்கு உதவியாக தனது தங்கையையும் உடன் சேர்த்துக்கொண்டாராம் சரிதா. சேலைகட்டி நடித்த பின்னர் அந்த அனுபவம் பற்றி கூறிய ஜெயசூர்யா, பெண்கள் எப்படித்தான் இந்த வெப்பத்தில் நாள் முழுக்க சேலை அணிந்து நடமாடுகிறார்களோ.. ஆச்சர்யமாக இருக்கிறது என கூறியுள்ளார்.