இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பொதுவாக தமிழோ, மலையாளமோ இரண்டு மொழி நடிகர்களும் மொழிபேதமின்றி இரண்டு திரையுலகங்களிலும் மாறிமாறி நடித்துக்கொண்டாலும் முலைப்பெரியாறு தண்ணீர் பிரச்சனை மட்டுமே இரண்டு தரப்பினருக்கும் சங்கடத்தை கொடுத்துக்கொண்டு இருக்கிறது.. ஆனாலும் காவிரி தண்ணீர் பிரச்சனை போல முல்லைப்பெரியாறு பிரச்சனையில் திரையுலக நட்சத்திரங்களை பொறுத்தவரை யாரும் யாரையும் தாக்கி பேசிக்கொள்வதில்லை.
அந்தவகையில் கடந்த வெள்ளியன்று மலையாளத்தில் வெளியான 'அங்கிள்' படத்தில் தமிழர்களின் மீதான தனது பாசத்தை சில காட்சிகளில் வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் மம்முட்டி. தனது நண்பரின் மகளுடன் காரில் கேரளாவுக்கு பயணிக்கும் மம்முட்டி வழியில் இரவில் தனது உறவினர் வீட்டில் தங்கிச்செல்லலாம் என நாயகியை அழைத்துச்செல்வார்..
ஆனால் அது தமிழர் ஒருவரின் வீடு.. அதற்கு நாயகி, சொந்தக்காரர்கள் என்று சொன்னீர்கள்.. ஆனால் தமிழர்களாக இருக்கிறார்களே என்பார். அதற்கு மம்முட்டி, ஏன் தமிழர்கள் நமக்கு சொந்தக்காரர்களாக இருக்க கூடாதா..? அவர்களும் நம் சகோதரர்கள் தான் என பெருமையாக கூறுவார்... அந்த தமிழராக தமிழ் நடிகர் மூணாறு ரமேஷ் நடித்துள்ளார். படத்தை மலையாள இயக்குனரான கிரிஷ் தாமோதர் என்பவர் இயக்கியுள்ளார்.