மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி |
பிரபல நடிகர்களுக்கு மெழுச்குசிலை உருவாக்கி அவற்றை மியூசியங்களில் வைப்பது அவ்வப்போது நடந்து வருகிறது. இவற்றில் பெரும்பாலும் வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியங்களில் தான் வைக்கபடுகின்றனர். ஆனால் கேரளாவில் உள்ள சிற்பி ஒருவர் மோகன்லால், மம்முட்டி இருவருக்கும் மெழுகுச்சிலை உருவாக்கி தனது சிற்பக்கூடத்திலேயே வைத்துள்ளார்..
கேரளாவில் பத்தினம்திட்டா பகுதியில் உள்ள கும்பநாட்டை சேர்ந்த வலியபறம்பில் ஹரிகிருஷ்ணன் என்பவர் தான் இந்த மெழுகுச்சிலைகளை வடிவமைத்துள்ளார். கற்சிற்பம் செதுக்கும் சிற்பியாக இருந்த இவர், ஐந்து ஆண்டுகள் போராடி தானாகவே மெழுகுச்சிலை உருவாக்கும் வித்தையை கற்று மலையாள சினிமா ஜாம்பவான்களான மோகன்லால், மம்முட்டி இருவரையும் அச்சு அசலாக மெழுகுச்சிலையாக வார்த்தெடுத்துள்ளர்.
வெளிநாடுகளில் உள்ளது போல மியூசியம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பது தான் சிற்பி ஹரிகிருஷ்ணனின் ஆசை. தற்போது மோகன்லால், மம்முட்டி என இருதரப்பு ரசிகர்களும் இந்த சிலைகளை பார்வையிட கும்பநாட்டிற்கு படையெடுத்து வருகிறார்கள்.