தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தலைநகரம், படிக்காதவன், மாப்பிள்ளை, அலெக்ஸ் பாண்டியன், சகலகலாவல்லவன், கத்திச் சண்டை படங்களை இயக்கியவர் சுராஜ். இதில் இவர் இயக்கிய மருதமலை படத்தின் காமெடி கோல்டன் காமெடியாக அமைந்தது.
வடிவேலுவும், அர்ஜூனும் போலீசாக நடித்த காமெடி அது. இப்போது இந்த போலீஸ் காமெடியை டெவலப் பண்ணி அடுத்த படம் இயக்குகிறார் சுராஜ். இதில் வடிவேலு, விமல் காமினேஷன். திரைக்கதை அமைக்கும் பணி முடிந்திருக்கிறது விரைவில் முறைப்படி அறிவிக்க இருக்கிறார்கள்.
'மன்னர் வகையறா' படத்திற்கு பிறகு தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களும் புதிய இயக்குனர்களும் விமலை அணுகி கதை சொல்லி வருகின்றனர். இந்த வருடத்தில் விமல் நடிப்பில் அரை டஜன் படங்களுக்கு மேல் வெளிவர இருக்கின்றன. இயக்குனர் எழில் டைரக்சனில் மீண்டும் நடிக்கிறார்.
இதுதவிர வெற்றிவேல் இயக்குனர் வசந்தமணி, தமிழன் பட இயக்குனர் மஜித், ஆகியோரின் படங்களில் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார் விமல். 'மன்னர் வகையறா' வை இயக்கிய பூபதி பாண்டியன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார். வரலட்சுமி ஜோடியாக நடித்துவரும் 'கன்னிராசி' படம் இறுதிக்கட்ட பணிகளில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சற்குணம் டைரக்சனில் 'களவாணி-2' படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.