தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
திரையுலகம் நடத்திய வேலை நிறுத்தத்தின் பலனாக டாப் ஹீரோக்களுக்கு சம்பள கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்ற கருத்து மேலோங்கி இருக்கிறது. தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களின் சம்பளம், ரூ.50 கோடி வரை உயர்ந்திருக்கிறது.
சம்பளத்தில் ரஜினி நம்பர் ஒன் இடத்திலும், விஜய், அஜித், கமல் அடுத்த இடத்திலும், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் மூன்றாவது இடத்திலும் இருக்கிறார்கள். முதல் வரிசையியில் இருப்பவர்கள் 25 முதல் 50 கோடி வரை சம்பளம் பெறுகிறார்கள், இரண்டாவது வரிசையில் இருப்பவர்கள் 20 முதல் 25 கோடி சம்பளம் பெறுகிறார்கள், மூன்றாவது வரிசையில் இருப்பவர்கள் 10 முதல் 20 கோடி சம்பளம் பெறுகிறார்கள்.
படத்தின் மொத்த பட்ஜெட்டில் 50 சதவிகிதம் ஹீரோக்களின் சம்பளமாக செல்கிறது. ஆந்திராவில் இருப்பது போல் ஒரு ஹீரோவின் படம் எவ்வளவு வசூலிக்கிறதோ அதன் அடிப்படையில்தான் அவர் சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என இங்கும் வாதங்கள் எழுந்துள்ளது. அல்லது படத்தின் லாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் ஹீரோக்களின் சம்பளமாக தரலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த வாதங்கள், கருத்துக்கள் எல்லாம் தயாரிப்பளர் சங்க வளாகத்திற்குள் தான் நடக்கிறதே தவிர பெரிய ஹீரோக்கள் இதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார்கள்.
இதுகுறித்து ஒரு கேள்வி ரஜினியிடம் கேட்கப்பட்டபோது "எனது சம்பளத்தை நான் தீர்மானிப்பதில்லை. தயாரிப்பாளர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்" என்றார்.
இதே கருத்தைத்தான் இப்போதுள்ள அனைத்து ஹீரோக்களும் கொண்டிருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் விரும்பி தருகிறபோது அதை ஏன் தடுக்க வேண்டும் என்கிறார்கள்.
"சம்பள கட்டுப்பாடு நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. ஒருவேளை நடைமுறைப்படுத்தப்பட்டாலும் தயாரிப்பாளர்கள் வெளிப்படையாக முறையான சம்பளத்தை கொடுத்துவிட்டு மறைமுகமாக மீதி சம்பளத்தை கொடுப்பார்கள். பிரச்சினை ஹீரோக்களிடம் இல்லை. தயாரிப்பாளர்களிடம் தான் இருக்கிறது" என்கிறார் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர்.