‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
டிஜிட்டல் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று தமிழ் திரைப்பட உலகம் 50 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தியது. இறுதியாக அரசின் சார்பில் நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு எட்டப்பட்டது. அந்த முடிவின்படி கியூப் நிறுவனங்கள் டிஜிட்டல் கட்டணத்தை குறைக்க ஒப்புக் கொண்டன. ஆனால் இப்போது திடீரென கட்டணத்தை உயர்த்தி உள்ளன.
அதாவது டிஜிட்டல் நிறுவனங்கள் தங்களின் பழைய கட்டணத்தில் குறைக்க வேண்டும் என்பது தான் தயாரிப்பாளர்களின் கோரிக்கை. ஆனால் டிஜிட்டல் நிறுவனங்கள் சமீபத்தில் தாங்கள் உயர்த்திய கட்டணத்தில் தான் குறைத்துள்ளன. அதனால் பழைய கட்டணத்தை விட தற்போது அதிக கட்டணமே வசூலிக்கப்படுவதாக தெரிகிறது. டிஜிட்டல் நிறுவனங்களோ நாங்கள் புதிய கட்டணத்தில் குறைப்பதாகத்தான் சொன்னோம் என்கிறதாம்.
இந்த குழப்பமான சூழ்நிலையில் நேற்று தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. கியூப் நிறுவனங்களின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தமிழக முதல்வரை சந்தித்து இதுகுறித்து முறையிடவும் முடிவு செய்யப்பட்டது.