மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் தியா. சாய்பல்லவி தமிழில் அறிமுகமான படம். லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு முதலில் கரு என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. அந்த தலைப்பு எனக்கு சொந்தமானது என்று ஒருவர் வழக்கு தொடர்ந்ததில் படத்தின் தலைப்பை தியா என்று மாற்றினார்கள். தற்போது தியா கதை என்னுடையது என்று ராஜகுமாரனிடம் உதவி இயக்குனராக இருந்த சந்திரகுமார் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
நான் இயக்குநர் ராஜகுமாரனிடம் திருமதி தமிழ் படத்தில் உதவி இயக்கு நராகப் பணியாற்றியிருக்கிறேன். பத்தாண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் போராடி வரும் உதவி இயக்குநர் நான் . தற்போது வெளிவந்துள்ள தியா படத்தின் கதை என்னுடையது. குறி கரு அல்லது சிசு என்று மூன்று தலைப்புகளை வைத்து இருந்தேன். இந்தக் கதை என் நண்பர்கள் வட்டத்தில் அனைவருக்கும் தெரியும்.
சமீபத்தில் வெளியான தியா படத்தைப் பார்த்தேன். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்படியே என் கதை. சிலவற்றை மட்டும் மாற்றியிருந்தார்கள். நான் வீரியமாக வசனங்கள் வைத்திருப்பேன். இதில் அந்த 5 வயதுக் குழந்தை அதிகம் பேசாமல் மாற்றியிருந்தார்கள்.
மற்றபடி தன்னைக் கருவிலேயே கொன்ற உறவினர் முதல் டாக்டர் வரை கொல்வது என்கிற அடிப்படைக் கதை படத்தின் உயிரோட்டமான சாராம்சம் என்னுடையது படத்தில் வரும் பல காட்சிகள் நான் அமைத்த கதையில் வரும் காட்சிகளாகவே இருந்தன. இந்தக் கதை என் இயக்குநர் ராஜகுமாரன் உள்பட பல நண்பர்களுக்குத் தெரியும்.
இந்தக் கதை என்னுடையது தான் என்று நிரூபிக்க எனக்குச் சாட்சியாக இயக்குநர் ராஜகுமாரன் உள்பட பல நண்பர்கள் உள்ளனர் . எப்போது எங்கே அழைத்தாலும் வருவார்கள். எனக்கு ஒன்றும் வேண்டாம் தியா ஒரு திருட்டுக்கதை என்று உலகத்துக்குத் தெரிந்தால் போதும் "என்கிறார், சந்திரகுமார்.