ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
தெலுங்கு ஸ்டார் மகேஷ் பாபு நடித்துள்ள, "பரத் அனே நேனு" கடந்த வாரம் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்தில் மகேஷ்பாபு இளம் முதல்வராக நடித்துள்ளார். இந்த நிலையில் படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று திருப்பதிக்கு குடும்பத்தினருடன் சாமி கும்பிட வந்திருந்தார். சாமி தரிசனம் முடிந்ததும், திருப்பதியில் படம் நடக்கும் தியேட்டருக்கு சென்று ரசிகர்களை சந்தித்து நன்றி கூறினார்.
பின்னர் அங்கு நிருபர்களுக்கு பேட்டியளித்த மகேஷ்பாபு "ஒரு போதும் அரசியலில் ஈடுபட மாட்டேன்" என்றார் அவர்மேலும் கூறியதாவது:
அரசியலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் இயக்குனர் எனக்கு சொன்ன கேரக்டரை உள்வாங்கிக் கொண்டும், மாமாவும், எம்.பி.யுமான கல்லா ஜெயதேவ் பார்லிமென்ட்டில் நடந்து கொள்ளும் விதத்தை வைத்தும் நடித்துள்ளேன். 100 ஆண்டுகள் ஆனாலும் மேக்கப் போட்டு கொண்டு திரைப்படத்தில் மட்டுமே நடிப்பேன் அரசியலுக்கு வரும் என்னம் இல்லை. என அவர் தெரிவித்தார்.
"தமிழகத்தில் ஜல்லிகட்டு , காவேரி தண்ணீருக்காக தமிழ் திரையுலகம் ஆதரவு அளித்து வரும் நிலையில் சிறப்பு அந்தஸ்துக்காக தெலுங்கு திரையுலகம் ஆதரவு தெரிவித்து எதுவும் செய்யவில்லையே..." என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.
பின்னர் பேசிய படத்தின் இயக்குனர் கொரட்டால் சிவா "திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்வதற்கும் ரசிகர்களை சந்திக்கவும் மட்டுமே வந்துள்ளார். இதுகுறித்து இந்த சிறிய மேடையில் பேச வேண்டாம் " என கூறி சமாளித்தார்.