ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
யானை மேல் குதிரை சவாரி படத்தை இயக்கிய கருப்பையா முருகன், அடுத்து இயக்கி வரும் படம் விடியாத இரவொன்று வேண்டும். இதில் பிடிச்சிருக்கு, முருகா, கோழிகூவுது படங்களில் நடித்த அசோக் ஹீரோவாக நடிக்கிறார். நடிகை ஆம்னியின் தம்பி மகள் கிருத்திகா ஸ்ரீனிவாஸ் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர்கள் தவிர ஈ.ராமதாஸ், முத்துக்காளை, சவுமியா உள்பட பலர் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் கருப்பையா முருகன் கூறியதாவது
சாலை விபத்துகளில் தமிழ்நாடு தான் முதலிடம் வகிக்கிறது. நமக்கு நடக்காதவரை எந்த விபத்தையும் ஈசியாக நாம் கடந்து சென்று விடுகிறோம். ஆனால் ஒவ்வொரு விபத்துக்கு பின்னாலும் பெரிய இழப்புகளும், வலிகளும் இருக்கிறது. அதைப் பற்றி பேசுகிற படம். ஒரு இரவில் நடக்கும் விபத்து தொடர்புடைய மனிதர்களை அந்த இரவுக்குள்ளேயே எப்படி மாற்றிப்போடுகிறது என்பதுதான் கதை.
ஒரே இரவில் நடக்கும் கதை. சென்னை மற்றும் அரக்கோணம் பகுதியில் முதல்கட்ட படப்பிடிப்புகள் நடந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் நடக்கிறது. விபத்து பற்றிய விழிப்புணர்வை ஒரு சினிமாவுக்கான திகிலோடு சொல்கிறோம். என்றார்.