சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
முதியவர்களை மையமாக வைத்து ஓடி விளையாடு தாத்தா, சந்தியாராகம், தலைமுறை என பல படங்கள் வெளிவந்திருக்கிறது. முதன் முறையாக முதியவர்களை மையமாக வைத்து ஒரு ஆக்ஷ்ன் த்ரில்லர் படம் தயாராகி வருகிறது. படத்தின் தலைப்பு நரை.
இதில் சங்கிலி முருகன், ஜூனியர் பாலையா, நளினிகாந்த், சந்தான பாரதி, மகாநதி சங்கர், ஞானவேல், விஜய் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட 60 வயதை தாண்டிய சீனியர் நடிகர்கள் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் ரோஹித், லீமா, ஈதன் என்ற இளம் வயது நடிகர், நடிகைகளும் நடிக்கிறார்கள். சினு சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார், அனிருத் விஜய் இசை அமைக்கிறர், டாக்டர் ஹேமா சரவணன் தயாரிக்கிறார், விவி இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: இப்போதெல்லாம் முதியோர் இல்லங்கள் பெருகி விட்டது. பெற்றோர்களை முதியவர்கள் இல்லத்தில் தனித்து விடுவதை குற்ற உணர்ச்சியின்றி செய்கிறார்கள். அப்படி விடப்பட்ட 7 முதியவர்கள் ஒரு இல்லத்தில் நண்பர்களாக வாழ்கிறார்கள். திடீரென ஒரு சம்பவம் அவர்கள் வாழ்க்கையை புரட்டி போடுகிறது. பெரும் சிக்கலில் அவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. படப்பிடிப்பு முடிந்து விட்டது. விரைவில் திரைக்கு வருகிறது. என்றார்.