தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் இருக்கும் பிரபல நடிகையர், சமூக வலைதளங்களில், தாங்கள் நடிக்கும் படங்கள், அவற்றின் புகைப்படம், சுற்றுலா புகைப்படங்கள் போன்றவற்றைத் தான், அதிகம் பதிவிடுவது வழக்கம். அரசியல், பொது விஷயங்களைப் பற்றி, மறந்தும் பதிவிடுவது இல்லை.
ஆனால், பாலிவுட்டில் அப்படி அல்ல; பெரும்பாலான நடிகையர், துணிச்சலாக அரசியல் விமர்சனங்களை முன் வைக்கின்றனர். தங்களுக்கும் சமூக பொறுப்பு உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் பல கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
கவுரவம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த, யாமி கவுதம் போடும் பதிவுகள் தான், வட மாநில அரசியல்வாதிகளை கலங்கடிக்கின்றன. அதிலும், சமீபகாலமாக நடக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து, சமூக வலைதளங்களில், கடுமையாக யாமி கவுதம் விமர்சித்துள்ளது, சக நடிகையரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.