டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் இருக்கும் பிரபல நடிகையர், சமூக வலைதளங்களில், தாங்கள் நடிக்கும் படங்கள், அவற்றின் புகைப்படம், சுற்றுலா புகைப்படங்கள் போன்றவற்றைத் தான், அதிகம் பதிவிடுவது வழக்கம். அரசியல், பொது விஷயங்களைப் பற்றி, மறந்தும் பதிவிடுவது இல்லை.
ஆனால், பாலிவுட்டில் அப்படி அல்ல; பெரும்பாலான நடிகையர், துணிச்சலாக அரசியல் விமர்சனங்களை முன் வைக்கின்றனர். தங்களுக்கும் சமூக பொறுப்பு உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் பல கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
கவுரவம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த, யாமி கவுதம் போடும் பதிவுகள் தான், வட மாநில அரசியல்வாதிகளை கலங்கடிக்கின்றன. அதிலும், சமீபகாலமாக நடக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து, சமூக வலைதளங்களில், கடுமையாக யாமி கவுதம் விமர்சித்துள்ளது, சக நடிகையரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.