இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மனிதாபிமானம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று சில சமயங்களில் யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. பழம் பெரும் திரைப்படக் கலைஞர்கள் மறைந்துவிட்டால் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தக் கூட இந்தக் கால நட்சத்திரங்கள் வருவதில்லை. ஏன், குறைந்த பட்சம் டிவிட்டரில் கூட இரங்கல் தெரிவிப்பதில்லை.
பழம் பெரும் பின்னணிப் பாடகியான எம்எஸ் ராஜேஸ்வரி நேற்று மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்கு கமல்ஹாசன் உள்ளிட்ட சிலர் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்ததுடன் சரி. மறைந்த ராஜேஸ்வரிக்கு நேரில் கூட அஞ்சலி செலுத்தாமல் தவிர்த்துள்ளார்கள்.
திரையுலகத்திலிருந்து யாராவது அஞ்சலி செலுத்த வருவார்கள் என அவருடைய உடலுடன் குடும்பத்தினர் காத்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள்.
“என் அம்மா 75 வருடமாக சினிமா துறையில் இருந்தார். நடிகர் சங்கம், டப்பிங் யூனியன் உறுப்பினர். இதுவரை சினிமாவில் இருந்து யாரும் தொடர்பு கொள்ளாதது வருத்தமாக இருக்கிறது. யாரவது அஞ்சலி செலுத்த வருவார்கள் காத்திருக்கிறோம்” என்று வருத்தத்துடன் சொல்கிறார் மறைந்த எம்.எஸ்.ராஜேஸ்வரியின் மகன் ராஜ் வெங்கடேஷ்.
ராஜேஸ்வரியின் உடல், குரோம்பேட்டையில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.