‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
மலையாள சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் ஜெயராஜ். தமிழில் கூட பரத், கோபிகா, நரேன் நடித்த '4 ஸ்டூடண்ட்ஸ்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். மலையாளத்தில் சமீப வருடங்களாக கமர்ஷியல் படங்களை இயக்குவதை விட்டு ஒதுங்கி விருது படங்களாக இயக்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட இவரது 'பயணகம்' என்கிற படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.
இத்தனை பெருமைகள் இருந்தும் இன்னும் மோகன்லாலை வைத்து இவர் ஒரு படம் கூட இயக்கவில்லையென்றால் அது ஆச்சர்யமான விஷயம் தான். ஆனால் எல்லோரையும் போலவே பல வருடங்களுக்கு முன் தனது படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் ஜெயராஜுக்கும் கொடுத்தார் மோகன்லால்..
எல்லாம் செட்டாகி, படப்பிடிப்புக்கு கிளம்பும் சமயத்தில் ஜெயராஜின் பர்சனல் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு பிரச்சனை காரணமாக இந்தப்படத்தை இயக்க முடியாமல் போய், படமும் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.. இத்தனைக்கும் தனது குடும்பத்துடன் வெளிநாட்டு சுற்றுலா சென்றிருந்த மோகன்லால், தனது குடும்பத்தை விட்டு பிரிந்து பாதியிலேயே இந்தப்படத்தில் நடிப்பதற்காக திரும்பி வந்தாராம். வந்தபின் தான் படம் கைவிடப்பட்ட தகவல் அவருக்கு தெரியுமாம்.
அந்த சம்பவத்தில் ரொம்பவே அப்செட்டானாரம் மோகன்லால். அதன்பின் மோகன்லாலை வெவ்வேறு சமயத்தில் சந்தித்து வெவ்வேறு கதைகளை ஜெயராஜ் சொன்னாலும், இபோதுவரை மோகன்லால் படத்தை இயக்குவது என்பது தனக்கு கானல் நீராகவே இருக்கிறது என வருத்தப்படுகிறார் ஜெயராஜ்.