வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ஒரு படத்தின் சில காட்சிகளில் தவறு நடந்துவிட்டால் அதை மீண்டும் படமாக்குவதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அப்படியிருக்க ஒரு படத்தையே சரியில்லை, மொத்தமாக மீண்டும் எடுங்கள் என்று சொன்னால் எப்படியிருக்கும். அப்படி ஒரு சம்பவம் தமன்னா நடித்துள்ள ஹிந்தி படத்திற்கு நடந்திருக்கிறது.
இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பில் சக்ரி டோலெட்டி இயக்கத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கும் படம் 'கொலையுதிர் காலம்'. இப்படத்தை ஹிந்தியில் தமன்னா நாயகியாக நடிக்க உருவாக்கினார்கள். இரண்டு படங்களையும் யுவனுடன் சேர்ந்து தயாரிக்கும் ஹிந்தித் தயாரிப்பாளரான வஷு பங்கானி, ஹிந்திப் படத்தைப் பார்த்துவிட்டு கொஞ்சம் கூட சரியில்லை, மீண்டும் மொத்தமாக எடுங்கள் என்று சொல்லிவிட்டாராம். தயாரிப்பாளரின் முடிவைக் கேட்டு தமன்னா ஷாக் ஆகிவிட்டாராம்.
ஹிந்தியில் ரீஷுட் எடுக்கச் சொன்னார்கள் சரி, ஆனால், படத்தை தமிழில் எடுத்து முடித்துவிட்டார்களா இல்லை என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. எடுக்காமலே இருந்திருந்தால் நல்லதுதான் இல்லை என்றால் மீண்டும் ரீஷுட் செய்யச் சொல்லியிருப்பாரே தயாரிப்பாளர் வஷு.