பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
திரு இயக்கத்தில் தயாராகியுள்ள படம் மிஸ்டர் சந்திரமெளலி. இந்த படத்தில் முன்னாள் ஹீரோ கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் ஆடியோ விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது கார்த்திக் பேசுகையில்,
1981-ல் சினிமாவில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடிக்க வந்தேன். 150 படங்கள் வரை நடித்து விட்டேன். இப்போது என் மகன் கவுதம் கார்த்தியுடன் இணைந்து மிஸ்டர்.சந்திரமெளலி படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ரொம்ப வித்தியாசமான கதை. அதுவும் மணிரத்னத்தின் மெளனராகம் படத்தில் நான் பேசிய வசனத்தையே இந்த படத்தின் தலைப்பாக்கி உள்ளார்கள்.
என் மகனுடன் நடிக்க வேண்டும் என்றதும் உற்சாகமாக நடித்தேன். அவரது திறமையை பார்த்து மலைத்து விட்டேன். மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். என் மகனைப்பார்த்து உங்க அப்பா போன்று பெயரெடுக்க வேண்டும் என்கிறார்கள். என் மகன் என்னை விடவும் பெரிய நடிகராக வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
நான் நடிக்க வந்த இரண்டு ஆண்டுகளில் என் தந்தை முத்துராமன் இருந்து விட்டார். அதனால் என்னால் அவருடன் நடிக்க முடியாமல் போய் விட்டது. அது இப்போதும் எனக்கு வருத்தமாக உள்ளது. அதேசமயம், இந்த படத்தின் மூலம் என் மகனுடன் நடித்து அவருக்கு அந்த சந்தோசத்தை நான் கொடுத்து விட்டேன் என்றார் கார்த்திக்.