ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
குழந்தை பாட்டுகளுக்கென்றே தனிப் பாடகியாக விளங்கிய எம்.எஸ்.ராஜேஸ்வரி நேற்று காலமானார். அவரைப் பற்றிய சில நினைவலைகள்...
பாரம்பரிய இசைக் குடும்பத்தை சேர்ந்தவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி. அவரது பாட்டி கண்ணாமணி அம்மாள் அந்த காலத்தில் பிரபலமான கர்நாடக இசைப் பாடகி. அவரது அம்மா டி.வி.ராஜசுந்தரி சினிமா நடிகை. அவரின் ஒரே மகள் இவர். மதுரை சடகோபன் ராஜேஸ்வரி என்பதன் சுருக்கமே எம்.எஸ்.ராஜேஸ்வரி.
அம்மா ராஜசுந்தரி சினிமாவில் நடிகையாக தன் வாழ்க்கையை தொடங்கியவர். நாடகங்களில் பாடி நடித்து வந்த அவர். 1930களில் ஹரிச்சந்திரா, மீராபாய், விபநாராயணா, விஸ்வாமித்ரா போன்ற படங்களில் நடித்தார்.
பள்ளியில் படித்துக் கொண்டிருந்த எம்.எஸ்.ராஜேஸ்வரியை சினிமாவுக்கு பாட அழைத்து வந்தவர் இயக்குனர் பி.ஆர்.பந்துலு. அவர் தான் ராஜேஸ்வரியை, ராமய்யா பிள்ளை நடத்தி வந்த ஸ்டார் கம்பைன்ஸ் என்ற சினிமா கம்பெனியில் மாதச் சம்பளத்துக்கு பாடகியாக சேர்த்து விட்டார். அப்போது அவருக்கு மாதம் 200 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. பின்னர் ஏவிஎம் நிறுவனத்தில் பல ஆண்டுகள் கம்பெனி பாடகியாக இருந்தார்.
1946ம் ஆண்டு வெளிவந்த விஜயலட்சுமி என்ற படம் தான் ராஜேஸ்வரி பாடிய முதல் படம். பாட்டு மையல் மிகவும் மீறுதே... என்கிற மோகம் ததும்புகிற பாடல். இதை பாடியபோது அவருக்கு வயது 12.
1948ம் ஆண்டு தியாகராஜ பாகவதருடன் ராஜமுக்தி படத்திற்காக கண்வழி நுழைந்து என் உள்ளம் கவர்ந்த கள்வனே... என்ற முதல் டூயட் பாடலை பாடினார்.
இந்தியில் வெளிவந்த ராமராஜ்ய என்ற படத்தை ஏவிஎம் செட்டியார் தமிழில் ராம ராஜ்யம் என்ற பெயரில் டப் செய்து வெளிட்டார். அதில் பெரும்பாலான பாடல்களை பாடியவர் ராஜேஸ்வரி. அதன் மூலம் முதல் டப்பிங் பட பாடகி என்ற பெருமை பெற்றார்.
ஓர் இரவு படத்தில் இடம்பெற்ற சாகாவரம் பெற்ற பாடலான துன்பம் சேருகையில் யாழ் எடுத்து நீ மீட்ட மாட்டாயா... பாடலை பாடியவர் ராஜேஸ்வரி. அவருடன் பாடியவர் தெலுங்கு பாடகர் வர்மா.
பராசக்தி படத்தில் இடம்பெற்ற ஒரு பெண்ணின் மனதை தொட்டு போனவரே... பாடலும், ஓ ரசிக்கும் சீமானே பாடலும்தான் ராஜேஸ்வரியை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
பாடலை எழுதி வைத்து பாடாமல் மனப்பாடம் செய்து பாடிய முதல் பாடகி இவர்.
ராஜேஸ்வரியின் குரலில் சிறிதாக குழந்தைதனம் இருக்கும், 1950களில் தான் இளம் வயது பெண்கள் நடிக்க வந்தார்கள். அவர்களுக்கு குழந்தைதனம் கலந்த குரல் தேவைப்பட்டதால் ராஜேஸ்வரியை அதிகமாக பாட வைத்தார்கள். பின்னர் அதுவே அவரை குழந்தை குரல் பாடகியாக்கியது.
காதலித்து திருமணம் செய்தார். கணவர் படத் தயாரிப்பில் ஈடுபட அதனால் சம்பாதித்த பணம் கரைந்தது. பின்னர் மேடை கச்சேரிகளில் பாடியே தன் குடும்பத்தை கரை சேர்த்தார்.