சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி |
நடிகர்களில் பிருத்விராஜை பொறுத்தவரை பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது ரசிகர்களிடம் பந்தா காட்ட மாட்டார். அந்த நேரத்தில் அரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதுடன் அவர்கள் கோரிக்கைகளையும் அந்த நேரத்தில் நிறைவேற்றவும் செய்வார்.
அப்படித்தான் சமீபத்தில் கேரளாவில் சாலக்குடி பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிருத்விராஜ். அது மறைந்த நடிகர் கலாபவன் மணியின் சொந்த ஊர் வேறு. அங்கிருந்த ரசிகர்கள் பிருத்விராஜை ஒரு பாடல் பாடும்படி வேண்டுகோள் வைத்துள்ளனர்.
அதற்கு பிருத்விராஜ் “பாடலா..? அதுவும் மணி சேட்டன் ஊரிலே நான் பாடுவதா..? அவ்வளவுதான் அந்த கடவுள் கூட என்னை மன்னிக்க மாட்டார்” என ஜகா வாங்கினார். ஆனாலும் ரசிகர்கள் விடுவதாக இல்லை என தெரிந்ததும் தான் நடித்த 'அமர் அக்பர் ஆண்டனி' படத்தில் இருந்து ஒரு பாடலை பாடி ரசிகர்களை மகிழ்வித்தாராம் பிருத்விராஜ்.