பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
நடிகர்களில் பிருத்விராஜை பொறுத்தவரை பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது ரசிகர்களிடம் பந்தா காட்ட மாட்டார். அந்த நேரத்தில் அரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதுடன் அவர்கள் கோரிக்கைகளையும் அந்த நேரத்தில் நிறைவேற்றவும் செய்வார்.
அப்படித்தான் சமீபத்தில் கேரளாவில் சாலக்குடி பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிருத்விராஜ். அது மறைந்த நடிகர் கலாபவன் மணியின் சொந்த ஊர் வேறு. அங்கிருந்த ரசிகர்கள் பிருத்விராஜை ஒரு பாடல் பாடும்படி வேண்டுகோள் வைத்துள்ளனர்.
அதற்கு பிருத்விராஜ் “பாடலா..? அதுவும் மணி சேட்டன் ஊரிலே நான் பாடுவதா..? அவ்வளவுதான் அந்த கடவுள் கூட என்னை மன்னிக்க மாட்டார்” என ஜகா வாங்கினார். ஆனாலும் ரசிகர்கள் விடுவதாக இல்லை என தெரிந்ததும் தான் நடித்த 'அமர் அக்பர் ஆண்டனி' படத்தில் இருந்து ஒரு பாடலை பாடி ரசிகர்களை மகிழ்வித்தாராம் பிருத்விராஜ்.