தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுடனான காதலை சுரேஷ் ரெய்னா மறுத்துள்ளார். மேலும் அவர் யாரென்றே எனக்கு தெரியாது என்றும், நிச்சயமாக ஒரு நடிகையை திருமணம் செய்ய மாட்டேன் என்றும் கூறியுள்ளார். வங்கதேசத்தில் நடந்த ஆசிய கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விட்டு நாடு திரும்பிய சுரேஷ் ரெய்னா, இதுகுறித்து மேலும் கூறியதாவது, எனக்கும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் காதல் என்று பத்திரிக்கைகளில் செய்தியை பார்த்ததும் ரொம்பவே அதிர்ச்சியடைந்தேன். லண்டனில் கிரிக்கெட் போட்டியை பார்க்க அனுஷ்கா வந்திருந்தார். அப்போது அவரை பார்த்து இருக்கிறேன். மற்றபடி அவர் யார் என்றே எனக்கு தெரியாது. அப்படி இருக்கையில் நானும், அவரும் ஒன்றாக ஊர் சுற்றினோம் என்பது போன்று செய்திகள் எல்லாம் வெளியாகியுள்ளன. இதுபோன்ற வதந்திகள் எல்லாம் எப்படி கிளம்புகிறது என்றே தெரியவில்லை.
இன்னும் ஓரிரு ஆண்டில் எனக்கு திருமணம் நடந்து விடும். நிச்சயமாக சினிமா நடிகையை நான் திருமணம் செய்ய மாட்டேன். மேலும் எங்களது குடும்பம் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தது. எனக்கு வரப்போகிற பெண் நல்ல அறிவுக்கூர்மை உள்ள பெண்ணாக, என்னையும், எனது குடும்பத்தை நன்கு பார்த்து கொள்ளும் பெண்ணாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பெண்ணை தான் திருமணம் செய்வேன் என்று கூறியுள்ளார்.