தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கேரள மாநிலம் குமுளியை சேர்ந்தவர் இஷாரா நாயர். ஆனால் படித்தது, வளர்ந்தது எல்லமே பெங்களூரு. மாடலிங் துறையில் இருந்த இஷாரா வெண்மேகம் என்ற படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு பப்பாளி படத்தில் நடித்தார்.
சதுரங்க வேட்டை படம் அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. ஆனால் நல்ல வாய்ப்புகளை கொடுக்கவில்லை. இவன் யாரென்று தெரிகிறதா? பப்பரப்பம் படங்களில் நடித்தார். போதிய வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு விலகி இருந்த இஷாரா, தற்போது திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஷாகில் என்பவரை கடந்த 18-ந் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள். சினிமா துறையை சேர்ந்த யாருக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை. திருமணமான ஒரு வாரத்திற்கு பின்பே இந்த தகவல் வெளிவந்திருக்கிறது.