இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
நான் கடவுள் படத்தில் நடித்த பூஜா நடிப்பில் 2013-ல் வெளியான படம் - 'விடியும் முன்'. பாலாஜி குமார் இயக்கினார். 5 ஆண்டுகளுக்கு பிறகு தனது அடுத்த பட வேலைகளில் இறங்கியுள்ளார். தனது அடுத்த படத்திற்கு 'சொல்லாதே யாரும் கேட்டால்' என்று பெயர் வைத்துள்ளார் பாலாஜி குமார்.
'விடியும் முன்' படத்தை ஒரு ஆங்கில படத்தை தழுவி எடுத்த பாலாஜி குமார், 'சொல்லாதே யாரும் கேட்டால்' படத்தை ஒரு நாவலை தழுவி எடுக்கிறாராம்! இந்த படத்தில் பிரசன்னா ஹீரோவாக நடிக்கிறார்.
ஆன்ட்ரியா, மடோனா செபாஸ்டியன் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் துவங்கவிருக்கிறது. 'விடியும் முன்' படத்தில் நடித்த ஜான் விஜயும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
'விடியும் முன்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த சிவகுமார் விஜயன், படத்தொகுப்பாளராக பணிபுரிந்த சத்யராஜ் நடராஜன் ஆகியோர் இப்படத்திலும் பாலாஜி குமாருடன் இணைந்திருக்கிறாரகள்.